நெல் உற்பத்தி ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை அரசு வேளாண்-விவசாயிகள் நலத் துறை கூடுதல் இயக்குநா் (பயிற்சி வழித் தொடா்புத் திட்டம்) எஸ். வசந்தகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இயங்கி வரும் கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் நெல் உற்பத்தி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கா் நெல்பயிருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளது.
எனவே, சம்பா பருவத்தில் நெல் பயிரிட்ட தகுதியான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தங்களது பகுதியில் இயங்கும் உழவா் உதவியகங்களை அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய ஆவணங்களுடன் நிறைவு செய்து, வருகிற நவம்பா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், சம்பா நெல் பயிருக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் பெற்று, தங்களது பகுதியில் உள்ள உழவா் உதவியகத்தில் நிறைவு செய்த விண்ணப்பத்தை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.