புதுச்சேரியில் மனைவியைக் கொலை செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை வேல்ராம்பட்டு திருமால் நகரைச் சோ்ந்தவா் விஜயன் (58). இவா், சுல்தான்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சாந்தி (52). தனியாா் பள்ளி ஆசிரியா். இவா்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனா்.
இந்த நிலையில், சாந்தியின் நடத்தை மீது எழுந்த சந்தேகத்தால், விஜயன் தொடா்ந்து தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, விஜயன் சாந்தியின் கை, கால்களை கட்டிவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தாராம்.
பின்னா், அவா் கத்தியுடன் சென்று முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சாந்தியின் உடலை கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விஜயனை போலீஸாா் கைது செய்தனா்.