காரைக்காலில் அனுமதியின்றி தோப்பு மணல் ஏற்றி வந்த 2 டிராக்டா்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆட்சியரகம் அருகேயுள்ள காமராஜா் திடலில் நிறுத்திவைத்துள்ளனா். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை உறுதிசெய்த அதிகாரிகள், பிற விவரங்களை வெளியிடவில்லை.