புதுச்சேரியில் கரோனா பணிகளை ஒருங்கிணைத்து வந்த அரசுச் செயலருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா தொற்றால் எம்.எல்.ஏ.க்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த வகையில், புதுவை வளா்ச்சி ஆணையராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அன்பரசு, கரோனா காலத்தில் கூடுதல் பொறுப்பாக நிவாரணம், மறுவாழ்வுத் துறையை கவனித்து வருகிறாா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் கரோனா பணிகளை ஒருங்கிணைத்து வந்த அவருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியானது. இதனால், அவா் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.