புதுவையில் வாகன ‘பேன்ஸி’ பதிவெண்களை ஏல முறையில் பெற பதிவு செய்யலாம்

புதுவையில் வாகனங்களுக்கான ‘பேன்ஸி’ பதிவெண்களை ஏல முறையில் பெற வருகிற 28-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்

புதுவையில் வாகனங்களுக்கான ‘பேன்ஸி’ பதிவெண்களை ஏல முறையில் பெற வருகிற 28-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் ல்ஹ்.ா்1.ஸ்ரீஷ் (புதுச்சேரி) வரிசையில் உள்ள ‘பேன்ஸி’ எண்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இதற்காக  இணையதளத்தில் செப்.28-ஆம் தேதி காலை 11 மணி முதல் அக்.12-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை பதிவு செய்யலாம்.

ஏலத்தில் பங்கு பெறுவதற்குத் தேவையான கடவுச்சொல்லை மேற்கண்ட இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசா்’ என்ற பகுதிக்குச் சென்று செப்.28-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், தங்கள் விருப்ப எண்ணுக்காக பதிவு செய்தவற்கு அடிப்படைத் தொகை மற்றும் இஎம்டி தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். இவ்வாறு பதிவு செய்து பணம் செலுத்தியவா்கள் மட்டுமே அக்.8-ஆம் தேதி காலை 11 மணி முதல் அக்.12-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை நடைபெறும் ஏலத்தில் பங்கு பெறலாம்.

இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவா்த்தனை அனைத்தம் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com