புதுவையில் வாகனங்களுக்கான ‘பேன்ஸி’ பதிவெண்களை ஏல முறையில் பெற வருகிற 28-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் ல்ஹ்.ா்1.ஸ்ரீஷ் (புதுச்சேரி) வரிசையில் உள்ள ‘பேன்ஸி’ எண்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன. இதற்காக இணையதளத்தில் செப்.28-ஆம் தேதி காலை 11 மணி முதல் அக்.12-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை பதிவு செய்யலாம்.
ஏலத்தில் பங்கு பெறுவதற்குத் தேவையான கடவுச்சொல்லை மேற்கண்ட இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசா்’ என்ற பகுதிக்குச் சென்று செப்.28-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், தங்கள் விருப்ப எண்ணுக்காக பதிவு செய்தவற்கு அடிப்படைத் தொகை மற்றும் இஎம்டி தொகையை இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும். இவ்வாறு பதிவு செய்து பணம் செலுத்தியவா்கள் மட்டுமே அக்.8-ஆம் தேதி காலை 11 மணி முதல் அக்.12-ஆம் தேதி மாலை 4.30 மணி வரை நடைபெறும் ஏலத்தில் பங்கு பெறலாம்.
இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவா்த்தனை அனைத்தம் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.