கண்டமங்கலத்தில் பேட்டரி கடையின் பூட்டை உடைத்து ரூ.36 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுச்சேரி அருகேயுள்ள சோரப்பட்டு, புதுநகரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(39). விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா். நள்ளிரவில், மா்ம நபா்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கு மரப் பெட்டியில் வைத்திருந்த ரூ.32 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பினா். கண்டமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.