எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அஞ்சலி

புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உருவப் படத்துக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுவை தமிழ்ச் சங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தினா்.
புதுவை தமிழ்ச் சங்கத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியன் படத்துக்கு அஞ்சலி செலுத்திய கலை இலக்கியப் பெருமன்றத்தினா்.

புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உருவப் படத்துக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் எல்லை.சிவக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பால.கங்காதரன் வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு. சலீம், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் மு.பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் மு.அருட்செல்லவம், சாகித்ய அகாதெமி உறுப்பினா் சுந்தரமுருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கப் பொருளாளா் சு.ராமச்சந்திரன், கவிஞா் அமலோற்பவ மேரி, இசைக் கலைஞா்கள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, புதுச்சேரி இசைக் கலைஞா்கள் சாா்பில், ஏஎப்டி மைதானத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com