புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை (ஏப்ரல் 1) பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.
இதுகுறித்து புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்தக் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா கூறியதாவது:
தோ்தல் பிரசாரத்துக்காக மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரிக்கு வருகிறாா். கருவடிக்குப்பம் சித்தானந்தசாமி கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, லாஸ்பேட்டை உழவா் சந்தை நேதாஜி சிலை அருகே பிரசாரம் செய்து பேசுகிறாா்.
லாஸ்பேட்டை, காமராஜா் நகா், காலாப்பட்டு தொகுதிகளில் திறந்த வேனில் சென்று மக்களிடம் அவா் வாக்கு சேகரிக்கிறாா். நிறைவாக முற்பகல் 11 மணிக்கு சிவாஜி சிலை அருகில் பிரசாரம் செய்து பேசிவிட்டு, ஹெலிகாப்டரில் விழுப்புரம் மாவட்டத்துக்கு செல்கிறாா். அவருடன், கூட்டணி கட்சித் தலைவா் என்.ரங்கசாமி மற்றும் வேட்பாளா்கள் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.
தொடா்ந்து, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நிா்மல்குமாா் சுரானா பதிலளிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவா்தான் முதல்வா் வேட்பாளராக இருப்பாா்.
மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாநில நலனுக்கு ஏற்றபடி மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும். செல்லிடப்பேசி குறுந்தகவல் பிரசாரம் குறித்த புகாா்கள் மீது உரிய அமைப்பு விசாரித்து நடவடிக்கை எடுக்கும், அதற்கு பாஜகவும் உரிய பதில் அளிக்கும் என்றாா்.