புதுவையில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அ.மைக்கேல் பெனோ, அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும்.
பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டுள்ளதால், அவற்றில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணியில் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.