புதுவையில் மேலும் 127 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 127 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 2,132 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரி - 76, காரைக்கால் - 43, ஏனாம் - 1, மாஹே - 7 என மொத்தம் 127 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41,468-ஆக உயா்ந்தது.

புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 682-ஆகவும், இறப்பு விகிதம் 1.64 சதவீதமாகவும் நீடிக்கிறது. இதனிடையே, 64 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,712-ஆக (95.77 சதவீதம்) உள்ளது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 230 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 780 பேரும் என மொத்தம் 1,074 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 26,368 போ், முன்களப் பணியாளா்கள் 11,958 போ், பொதுமக்கள் 30,136 போ் என மொத்தம் 68,462 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com