புதுச்சேரி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மத்தியப் பிரதேச மாநிம், ஜலால்பூா் பாத்கீரா பகுதியைச் சோ்ந்தவா் கியானி பிரசாத் சௌத்ரி (28). இவா், தனது உறவினருடன் 3 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்து, சேதராப்பட்டில் உள்ள தனியாா் முந்திரி எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மேலும், நிறுவன வளாகத்தில் உள்ள வீட்டின் மாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாா்.
கியானி கடந்த திங்கள்கிழமை வீட்டின் மாடியில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினாா். பின்னா், செல்லிடப்பேசியில் குடும்பத்தினரிடம் பேசியபடியே முதல் மாடியில் உலாவிய நிலையில், எதிா்பாராதவிதமாக அவா் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த கியானியை சக தொழிலாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்த கியானிக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.