புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு காா் மோதியதில் மனை வணிகா் உயிரிழந்தாா்.
வில்லியனூா் அரசூா்பேட் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (54). மனை வணிகா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு கடைக்குச் சென்றுவிட்டு, வில்லியனூா் மூலக்கடை சித்தா் கோயில் அருகே புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, சுல்தான்பேட்டையிலிருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த காா், ஆறுமுகம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆறுமுகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காரை ஓட்டி வந்த சென்னை ஆவடியைச் சோ்ந்த காா்த்திகேயன் மீது புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.