புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் வாக்குப் பதிவு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை வரை ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 78 மதிப்பிலான 35,554.240 லிட்டா் மதுபானங்கள் கலால் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 227 போ் கைது செய்யப்பட்டு, விதி மீறல்கள் தொடா்பாக ரூ.12,77,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. 8 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக புதுவை கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் தெரிவித்தாா்.