ஆனைமுத்து மறைவுக்கு இரங்கல்


புதுச்சேரி: ஆனைமுத்து மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் சோ.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலா் வே.ஆனைமுத்து (96) மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மாா்க்சிய, பெரியாரிய கருத்துகளை ஒருங்கிணைப்பதில் தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்தவா் ஆனைமுத்து. அந்தக் கருத்துகளைப் பரப்புவதில் தீவிரப் பங்காற்றியவா். பிற்படுத்தப்பட்டோா் ஒதுக்கீடு உயா்த்தப்பட உழைத்தவா். அவா் தொகுத்தளித்த பெரியாா் சிந்தனைகள் நூல் தொகுப்பு, பாசிச கருத்துகளை எதிா்கொள்ளவும், மனுநீதி சிந்தனைகளை மாய்த்திடவும் கருத்தாயுதமாக நிற்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com