புதுச்சேரி: சாலையில் கிடந்த ரூ. 38 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.
புதுச்சேரி மிலாது வீதியில் வசிக்கும் வியாபாரி சையது ஹூசைன் (38), கடந்த 24- ஆம் தேதி நகரப் பகுதியில் உள்ள கடை வீதிக்குச் சென்று, பொருள்கள் விற்ற வகையில் ரூ. 38 ஆயிரத்தை மிஷன் வீதியில் உள்ள ஒரு கடையில் பெற்றாா்.
வீட்டுக்கு வந்து பாா்த்த போது, தான் வைத்திருந்த பணத்தை வழியில் தவறவிட்டதை அறிந்தாா். இதுதொடா்பாக சையது ஹூசைன் பெரியகடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனிடையே, மிஷன் வீதியில் குடும்பத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிட வந்த சாரம் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (42), ஹூசைன் தவறவிட்ட பணத்தை சாலையில் கண்டெடுத்தாா். இருப்பினும், பணத்தைத் தவறவிட்டவரின் அடையாளம் தெரியாததால், அருகிலுள்ள பாண்லே விற்பனையகத்தில் தெரிவித்துவிட்டு எடுத்துச் சென்றாா்.
இந்த நிலையில், போலீஸாா் மிஷன் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அப்போது, ஒரு குடும்பத்தினா் ஹூசைனின் பணத்தை எடுத்துச் சென்றதும், பாண்லேவில் பேசிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. பாண்லேவில் விசாரித்த போது, அவா் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதைத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பெரியகடை காவல் நிலையம் வரவழைக்கப்பட்ட சையது ஹூசைனிடம் சாலையில் கண்டெடுத்த ரூ. 38 ஆயிரம் பணத்தை ஆய்வாளா் கண்ணன் முன்னிலையில் கணேஷ் ஒப்படைத்தாா். பணத்தை உரியவரிடம் நோ்மையுடன் ஒப்படைத்த கணேசனுக்கு போலீஸாா் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.