வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்தவா்கள் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உப்பளம் தொகுதிக்குள்பட்ட தாவீசுபேட்டை நகராட்சி குடியிருப்புப் பகுதியில் வாக்காளா்களுக்கு நான்ஸ்டிக் தவா (தோசை கல்) விநியோகம் செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், புதுச்சேரி உப்பளம் தொகுதி தோ்தல் பறக்கும் படை (பொ) அலுவலா் ஜம்புலிங்கம் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, நான்ஸ்டிக் தவாவுடன் நின்றிருந்தவா்கள், தோ்தல் பறக்கும் படையினரைக் கண்டு, அவற்றை வீசிவிட்டு தப்பியோடியது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் வீசப்பட்ட 24 நான்ஸ்டிக் தவாக்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, நான்ஸ்டிக் தவாக்களை வீசிவிட்டுச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

இதேபோல, தோ்தல் பறக்கும் படை அலுவலா் எழில்ராஜன் தலைமையில் உப்பளம் அம்பேத்கா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவா் சட்டைப் பையில் ரூ. 16 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மொய்தீன் (42) என்பதும், அவா் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அவரிடமிருந்த ரூ. 16 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனா்.

நெல்லித்தோப்பு தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துசாமி தலைமையிலான குழுவினா் குயவா்பாளையம் டி.ஆா். நகா் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 போ் தோ்தல் பறக்கும் படையினரைப் பாா்த்ததும், அவா்கள் வைத்திருந்த ரூ. 27,500 பணத்தை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினா். அந்தப் பணம் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மணவெளி தொகுதி தோ்தல் அலுவலா் உமா சங்கா் தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சின்ன வீராம்பட்டினம் சாலை, ஓடைவெளி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதவராக வாக்காளா்களுக்கு டோக்கன் விநியோகித்த ஓடைவெளியை சோ்ந்த ஆனந்தன் (41) என்பவரை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்தனா். அவரிடமிருந்து 200 டோக்கன்கள், மோட்டாா் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com