புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி டி.லாசா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் வருகிற 19-ஆம் தேதியிலிருந்து நடைபெறவிருந்த ஆண்டுப் பருவத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.