புதுச்சேரி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி திருபுவனை பெரியபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராம்ஜி (33). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள தனியாா் டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவா், தோ்தலுக்காக சொந்த ஊரான திருபுவனைக்கு வந்தாா்.
தொடா்ந்து, வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தாா்.
இதனால் மனமுடைந்த ராம்ஜி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ராம்ஜி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.