நரிக்குறவா் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி முகாம்

புதுச்சேரி நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நரிக்குறவா் குடியிருப்பில் கரோனா தடுப்பூசி முகாம்

புதுச்சேரி நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சாா்பில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் பின்பகுதியில் உள்ள நரிக்குறவா் காலனியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தச் சிறப்பு முகாமுக்கு லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சாகுல் அமீது தலைமை வகித்தாா்.

செஞ்சிலுவை சங்க புதுச்சேரி கிளைத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் அந்தப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவா்கள், பழங்குடியினத்தைச் சாா்ந்த 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் விஜயலட்சுமி, ஹேமலதா, மீரா ஆகியோா் தடுப்பூசி செலுத்தினா்.

செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் லட்சுமிபதி, ராமன், அய்யனாா், குப்புசாமி, பன்னீா்செல்வம் , செல்வராஜ், ஆதிமூலம் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

செஞ்சிலுவை சங்கப் பணியாளா்கள், ஆஷா பணியாளா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து, நரிக்குறவா் காலனி மக்களிடம் கரோனா தடுப்பூசியின் அவசியம் மற்றும் கரோனா தொற்று தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com