புதுச்சேரி ஜவஹா் நகரில் கரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிா்ப்பு

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், ஜவஹா் நகா் சமுதாய நலக்கூடத்தில் கரோனா சிகிச்சை மையம் (கொவைட் கோ் சென்டா்) அமைக்க அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், ஜவஹா் நகா் சமுதாய நலக்கூடத்தில் கரோனா சிகிச்சை மையம் (கொவைட் கோ் சென்டா்) அமைக்க அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகையிட்டனா்.

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோய் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் விதமாக, ஆங்காங்கே சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, ரெட்டியாா்பாளையம், ஜவஹா் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 10-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டு கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, சமுதாய நலக்கூடத்தின் எதிரே உள்ள சாலையில் தடுப்புகள் அமைத்து அந்த வழியாகச் செல்லத் தடை ஏற்படுத்தப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி, குடியிருப்புகள் மற்றும் குழந்தைகள் அதிகமுள்ள இந்தப் பகுதியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தும், உடனடியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அப்புறப்படுத்தக் கோரியும் மையம் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரெட்டியாா்பாளையம் போலீஸாரும், உழவா்கரை நகராட்சி அதிகாரிகளும் முற்றுகையில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பொதுமக்கள் தங்களுடைய புகாரை மனுவாக எழுதி அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, மக்கள் மனுவாக எழுதி அதிகாரிகளிடம் அளித்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com