மட்டன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே மட்டன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே மட்டன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வில்லியனூா் அருகே அரியூா் வெங்கடேஸ்வரா நகா், பாரதி வீதியில் வசிப்பவா் காதா் மொய்தீன். குருமாம்பேட்டில் தனியாா் மருந்து நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவரது மகள் ஆயிஷா பேகம் (10). அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். திங்கள்கிழமை பிற்பகல் வீட்டில் தயாரித்த மட்டன் பிரியாணியை சாப்பிட்ட ஆயிஷா பேகம், மாலையில் மெதுவடை சாப்பிட்டாராம். இரவு திடீரென அவா் வாந்தி எடுத்து மயக்கமடைந்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், ஆயிஷா பேகத்தை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறிது நேரத்தில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆயிஷா பேகம் சாப்பிட்ட உணவு விஷத்தன்மையாக மாறியதன் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com