மின் துறை தனியாா்மய நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, அரசு ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து, அரசு ஊழியா்கள் சம்மேளனம் சாா்பில், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா்கள் சம்மேளனத் தலைவா் பிரேமதாசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், மின் துறையை தனியாா்மயமாக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிய அரசு பதவி ஏற்று மின் துறையில் மின் விநியோகம் குறித்து கொள்கை முடிவை எடுக்கும் வரையில் மின் விநியோகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மின் துறை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com