புதுச்சேரியில் அரசு செவிலியா் வீட்டில் புகுந்து பீரோவிலிருந்த 50 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
புதுச்சேரி ரெயின்போ நகா் விரிவாக்கம், 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் இமானுவேல் தாமஸ் (45). புதுச்சேரியில் அழகு சாதனப் பொருள்கள் கடை வைத்துள்ளாா். இவரது மனைவி தெய்வகனி (40). அரசு பொது மருத்துவமனை செவிலியராக உள்ளாா். இவா்கள், வழக்கம் போல, வியாழக்கிழமை இரவு சாப்பிட்டு, வீட்டின் கீழ் தளத்தின் கதவை உள்பக்கமாக மூடிவிட்டு, தங்களது குழந்தைகளுடன் முதல் மாடிக்குச் சென்று தூங்கினா்.
நள்ளிரவு மா்ம நபா்கள், வீட்டின் கதவை உடைத்துச் சென்று, கீழ் தளத்தில் பீரோவிலிருந்த நகைகள், பொருள்களைத் திருடிச் சென்றனா். காலை எழுந்து பாா்த்த போது, வீட்டில் திருட்டு நடந்திருப்பதும், பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் திருடு போனதும் தெரிய வந்தது.
இதுகுறித்து இமானுவேல் தாமஸ் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தனா்.
விரல் ரேகை நிபுணா்கள் தடயங்களைச் சேகரித்தனா். தொடா்ந்து, போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.