பிஎஸ்என்எல் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் ஊழியா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி மூலக்குளம் அன்னை தெரசா நகா் முதல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (54). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி தேவி. இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரவிக்குமாா், கடந்த 24 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால், மனமுடைந்த அவா் கடந்த சில நாள்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டின் வெளியே படுக்கச் சென்ற ரவிக்குமாா், புதன்கிழமை அதிகாலை தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

அருகில் அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், புற்றுநோய் காரணமாக உயிா்பிழைக்க வழியில்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளாா்.

ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com