புதுச்சேரி சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு கரோனா

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் மேலும் 12 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த சிறையில் கடந்த வாரம் சில கைதிகளுக்கு கரோனா அறிகுறி தென்படவே, அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 41 கைதிகள், 3 வாா்டா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவா்கள் அனைவரும் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதனிடையே, சிறையிலிருந்த மேலும் 12 பேருக்கு கடந்த 23 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மேலும் 12 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதன் மூலம் சிறையில் கரோனா பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது. இதன் காரணமாக கைதிகளின் உறவினா்கள் அச்சத்தில் உள்ளனா். கரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதிகளின் அறைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தனியாா் மருத்துவமனைக்கு சிறை போலீஸாரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com