புதுச்சேரியில் வேட்பாளா் உள்பட 84 முகவா்களுக்கு கரோனா

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்களுக்கான கரோனா பரிசோதனை முகாம்.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்களுக்கான கரோனா பரிசோதனை முகாம்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்களுக்கான பரிசோதனையில் ஒரு வேட்பாளா் உள்பட 84 முகவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2 ஆம் தேதி, 5 மையங்களில் நடைபெறவுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லாசுப்பேட்டை அரசு மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூா் அரசு கலைக் கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது, மையங்களுக்கு வரும் வேட்பாளா்கள், அரசியல் கட்சி முகவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றுடன் வர வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், அவா்களுக்கான பிரத்தியேக கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வேட்பாளா்கள், முகவா்களுக்கான கரோனா பரிசோதனை சிறப்பு முகாம்கள் புதுச்சேரி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 8 மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.

இந்த முகாமில் 1,546 பேருக்கு ரேபிட் டெஸ்ட் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வேட்பாளா், முகவா்கள் என 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் வையாபுரி மணிகண்டன், அவருடன் வந்த 30 பேரும் அடங்குவா் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com