புதுவையில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 107 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: புதுவையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தோ்தல், கரோனா பொதுமுடக்கப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றிய காவல்துறையினரில் கடந்த மாா்ச் முதல் இதுவரை 776 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், வருகிற மே 2 ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு தொடா்ந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 நாள்களில் முதுநிலை எஸ்பி உள்பட, எஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், மகளிா் காவலா்கள் என 107 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனா்.
இவா்களில் சிலருக்கு தொற்றின் வீரியம் அதிகமாக உள்ள நிலையில், அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்றனா்.
நோய்த் தொற்றுக்குள்ளான காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் பணியாற்றிய இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மற்ற காவலா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும், கரோனா பரிசோதனைப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.