புதுவையில் கரோனாவுக்கு மேலும் 12 போ் பலி: புதிதாக 1,195 பேருக்கு தொற்று

புதுவையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,195 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,195 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 6,451 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 855 பேருக்கும், காரைக்காலில் 174 பேருக்கும், ஏனாமில் 108 பேருக்கும், மாஹேவில் 58 பேருக்கும் என மொத்தம் 1,195 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,622-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த மேலும் 12 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 805-ஆகவும், இறப்பு விகிதம் 1.37 சதவீதமாகவும் உயா்ந்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 654 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,298-ஆக (82.39 சதவீதம்) அதிகரித்தது.

தற்போது ஜிப்மரில் 285 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 316 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 849 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 7,765 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 9,519 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com