கஞ்சா விற்பனை: 5 போ் கைது

புதுச்சேரி கோரிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி கோரிமேடு அருகே மேட்டுப்பாளையம் கனரக ஊா்த்தி முனையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தன்வந்திரி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு ரோந்து சென்ற போலீஸாா், சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்ததில், புதுச்சேரி திலாசுப்பேட்டையைச் சோ்ந்த அருள் (32), லாசுப்பேட்டை சேகா் (28), கோரிமேடு ஈஸ்வரன் (27), கடலூா் முத்துக்குமரன் (26), வெங்கடேசன் (27) ஆகியோா் என்பதும், அந்தப் பகுதியில் உள்ள மாணவா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஒன்றரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com