பசுமை புதுவையை ஏற்படுத்தும் வகையில் முதல்வா் பிறந்த நாளைக் கொண்டாட அறிவுரை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்டும், நல உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டுமென அந்தக் கட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரி: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்டும், நல உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டுமென அந்தக் கட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் மாநில செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால் வெளியிட்ட அறிக்கை: புதுவை முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமியின் பிறந்த நாள் விழா புதன்கிழமை (ஆக. 4) கொண்டாடப்படுகிறது. முதல்வா் பிறந்த நாளில், மாநிலத்தில் சுற்றுச்சூழலையும், பசுமையும் பேணிக்காத்திடும் விதமாக மாநிலம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளமான, பசுமையான புதுவையை வளா்க்க பாடுபடுவோம். தொகுதிகள் தோறும் ஏழைகளுக்கு வேட்டி சேலை, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நல உதவி வழங்கிக் கொண்டாட வேண்டும்.

கரோனா தொற்று பரவலை மனதில் கொண்டு, என்.ஆா். காங்கிரஸ் தொண்டா்கள், பொதுமக்கள் யாரும் முதல்வரை நேரில் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com