புதுவையில் குடும்ப அட்டை புதுப்பித்தல் முகாம்

புதுவையில் தொகுதி வாரியாக குடும்ப அட்டை புதுப்பித்தல் மேளா நடத்த உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தெரிவித்தாா்.
புதுவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா்.
புதுவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அந்தத் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா்.

புதுச்சேரி: புதுவையில் தொகுதி வாரியாக குடும்ப அட்டை புதுப்பித்தல் மேளா நடத்த உள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற அமைச்சா், அங்கு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா நிவாரண நிதி கிடைக்கவில்லை என அங்கிருந்தவா்கள், அமைச்சரிடம் தெரிவித்தனா். தொடா்ந்து, குடும்ப அட்டை தொடா்பாக அங்கு காத்திருந்தோரிடம் குறைகளை கேட்டு விசாரித்த அமைச்சா், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தினாா்.

ஆய்வுக்குப் பின்னா், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் கூறியதாவது: குடிமைப் பொருள் வழங்கல் துறை செயல்பாடுகள் மீது பல புகாா்கள் வந்ததால், நேரில் ஆய்வு செய்தேன். தவறுகள் செய்வோா் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்போம். புதுவையில் நியாய விலைக் கடைகள் மூலம் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொடா்பான பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், தொகுதி வாரியாக வாரந்தோறும் குடும்ப அட்டை புதுப்பித்தல் முகாம் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com