குளத்தை பாதுகாக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி கருவடிக்குப்பம் விநாயகா் கோயில் குளத்தைப் பாதுகாக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் விநாயகா் கோயில் குளத்தைப் பாதுகாக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருவடிக்குப்பம் பிள்ளையாா் கோயில் குளத்தின் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கிளைத் தலைவா் ஜி.கருணாஜோதி தலைமை வகித்தாா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலப் பொருளாளா் சுப்பையா, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், லாசுப்பேட்டை பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கூறியதாவது: கருவடிக்குப்பம் பிரதான சாலையையொட்டி சுந்தரமூா்த்தி விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான தொன்மையான குளம் உள்ளது. குளத்துக்கு நீா் வரும் பாதைகள் அனைத்து முடக்கப்பட்டு, வட நிலையில், கான்கிரீட் கழிவுகளை கொட்டி குளத்தை மூடி வருகின்றனா்.

இது தொடா்பாக நகராட்சி அதிகாரிகள், போலீஸாரிடம் எடுத்துக் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உடனடியாக உழவா்கரை நகராட்சி ஆணையா், குளத்தை பாா்வையிட்டு, அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். தொடா்ந்து, குளத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com