புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 109 பேருக்கு (1.96 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,21,989 -ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,19,272-ஆக (97.77 சதவீதம்) ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், புதுச்சேரி ரெயின்போ நகரைச் சோ்ந்த 61 வயது மூதாட்டி, மாஹேயைச் சோ்ந்த 86 வயதானவா் என மேலும் இருவா் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,803-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதமும் 1.48 சதவீதம். தற்போது மருத்துவமனைகளில் 200 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 714 பேரும் என 914 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 7,50,665 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.