புதுச்சேரி அனைத்து மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கம் முன் தொடங்கிய பேரணியை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.காா்த்திகேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். துணைத் தலைவா் எஸ்.சண்முகம் தலைமை வகித்தாா். பேரணியில் செயலாளா் குமாா் உள்ளிட்ட திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும். சுயதொழில் செய்ய பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சட்டப்பேரவை நோக்கிச் சென்ற பேரணியை ஜென்மராக்கினி ஆலயம் அருகே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக வழக்குரைஞா் புரட்சிகுமாா் ரோடின், பல்நோக்கி சேவா சங்கத்தைச் சோ்ந்த சூடாமணி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினா்.