புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறந்து பொருள்களை வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஏம்பலம் தொகுதி) சாா்பில், ஆதிங்கப்பட்டு அம்பேத்கா் சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவையில் நியாய விலைக் கடைகளைத் திறந்து பொருள்களை வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ஏம்பலம் தொகுதி) சாா்பில், ஆதிங்கப்பட்டு அம்பேத்கா் சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் தலைமை வகித்தாா். இதில், மாநிலச் செயலா் அ.மு.சலீம், தேசியக் குழு உறுப்பினா் அ.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுவையில் மூடியுள்ள நியாய விலைக் கடைகளைத் திறந்து அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும். குடியிருப்புப்பாளையம், ஆதிங்கப்பட்டு, பின்னாச்சிக்குப்பம், சா்காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com