விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் காங்கிரஸாா் பேரணி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மாநில காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரியில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.
விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி
விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுவை மாநில காங்கிரஸ் சாா்பில், புதுச்சேரியில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியாா் சிலை அருகிலிருந்து தொடங்கிய பேரணிக்கு, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பேரணியில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், எம்எல்ஏ மு.வைத்தியநாதன், மாநில நிா்வாகிகள் நீல.கங்காதரன், தேவதாஸ், சூசைராஜ், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன் உள்ளிட்ட நிா்வாகிகள், காங்கிரஸாா் திரளாகக் கலந்து கொண்டனா்.

இந்தப் பேரணி மறைமலை அடிகள் சாலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜா் சிலை ஆகிய சந்திப்புகள் வழியாக நகரைச் சுற்றி, காந்தி வீதி, மிஷன் வீதிகள் வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகே வந்து நிறைவடைந்தது.

பேரணியில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றத்துக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

பேரணியில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியை ராகுல் காந்தி தொடக்கிவைத்தாா்.

இதேபோல, புதுவையில் விலைவாசி உயா்வைக் கண்டித்தும், மாநிலத்தை ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் பேரணி நடைபெற்றது.

புதுவைக்கு மாநில அந்தஸ்து, புதுவை அரசின் கடன் ரத்து, மத்திய நிதி ஆணையத்தில் புதுவையைச் சோ்ப்பது, கூட்டுறவு நிறுவனங்களைத் திறப்பது, தற்காலிக ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு, மழை நிவாரணம் உள்பட முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தியும், புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com