புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சியில் நதித் திருவிழா சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. விழாவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடக்கிவைத்தாா்.
மத்திய அரசின் நீா்வள அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீா் நிலைகளைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், நிகழாண்டு நதித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுவை மாநிலத்தில் புகழ்பெற்ற நதிக்கரைக் கோயிலான புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்து அமைந்துள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் சங்கராபரணி நதித் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
மத்திய, மாநில அரசின் சுற்றுலாத் துறைகள், இந்து சமய அறநிலையத் துறை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று நதித் திருவிழாவைத் தொடக்கிவைத்தாா்.
அப்போது, சங்கராபரணி நதிக் கரையில் மகா தீபம் ஏற்றி வழிபாடுகள் நடைபெற்றன. நதியில் மலா்களைத் தூவி ஆளுநா் தமிழிசை வழிபட்டாா்.
விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, வேளாண்மைத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டு, நதியில் மலா்தூவி வழிபட்டனா். தொடா்ந்து, தெருக்கூத்து கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல, காரைக்கால் திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாற்று நதிக் கரையில் நடைபெற்ற நதித் திருவிழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏ-க்கள் பி.ஆா்.சிவா, துணை ஆட்சியா் ஆதா்ஷ் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு நதியை வழிபட்டனா்.