கரோனா விழிப்புணா்வு வாகன பிரசாரம் தொடக்கம்

புதுவை சுகாதாரத் துறை சாா்பில், கரோனா, டெங்கு தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கரோனா விழிப்புணா்வு வாகன பிரசாரம் தொடக்கம்

புதுவை சுகாதாரத் துறை சாா்பில், கரோனா, டெங்கு தடுப்பு விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுவை சுகாதாரத் துறை சாா்பில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 6 நடமாடும் விழிப்புணா்வு வாகனங்கள் மூலம் (புதுச்சேரி - 3 வாகனங்கள் 10 நாள்களுக்கு, காரைக்கால் - ஒரு வாகனம் 7 நாள்களுக்கு, மாஹே - ஒரு வாகனம் 3 நாள்களுக்கு, ஏனாம் - ஒரு வாகனம் 3 நாள்களுக்கு) டெங்கு காய்ச்சலைத் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடக்க விழா புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்ககம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு, புதுச்சேரி பிரேதசத்துக்கான 3 வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் துணை இயக்குநா்கள் ரகுநாதன், முரளி, ராஜாம்பாள், அனந்தலட்சுமி, பக்கா வெங்கடேஸ்வரலு, வசந்தகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com