புதுச்சேரியில் காலை முதல் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இரவு 7 மணிக்கு பிறகு மழை குறைந்துள்ளது. இதனால் பாண்டி மெரீனா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஏராளமான பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர்.
இதனிடையே தொடர் மழையால் புத்தாண்டு கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், மழை விட்டுள்ளதால் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தற்போது புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர்.