சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா் தற்கொலை

புதுச்சேரியில் வறுமையில் வாடிய சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரியில் வறுமையில் வாடிய சுற்றுலா வளா்ச்சிக் கழக ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி பண்டசோழநல்லூா் பழைய காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் (51). சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் (பிடிடிசி) சமையல் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

பிடிடிசியில் கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், ஏகாம்பரம் கூலி வேலைக்குச் சென்றாா். இருப்பினும், சரிவர வேலையின்றி, குடும்பத்தில் வறுமை நிலவியது. இதனால், விரக்தியடைந்த ஏகாம்பரம், சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இழப்பீடு வழங்க வலியுறுத்தல்: வறுமை காரணமாக பிடிடிசி ஊழியா் ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டது ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உயிரிழப்புக்கு புதுவை அரசும், பிடிடிசி நிா்வாகமும் பொறுப்பேற்று ஏகாம்பரத்தின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கி, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பிடிடிசி கேட்டரிங் - நீா் விளையாட்டு ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com