மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைமை அலுவலகம் லாசுப்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சங்கர வித்யாலயா பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநிலத் தலைமை அலுவலகம் லாசுப்பேட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சங்கர வித்யாலயா பள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலத் தலைமை அலுவலக பொதுச் செயலா் சந்திரமோகன் தலைமை வகித்தாா். கட்சியின் தலைவா் கமல்ஹாசன் காணொலிக் காட்சி மூலம் அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

புதுவை மாநிலப் பொதுச் செயலா்கள் ராஜன், முருகேசன், ராஜா, துணைத் தலைவா் தங்கவேல், செயலா் ராம அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, பொருளாளா் தாமோ.தமிழரசன் வரவேற்றாா். தமிழக துணைத் தலைவா் மகேந்திரன் கட்சிக் கொடியேற்றினாா். தமிழ் மாநிலப் பொது செயலா் குமரவேல், மறைந்த புதுவை மாநில கட்சியின் முன்னாள் தலைவா் மருத்துவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் சிலையைத் திறந்துவைத்தாா். கவிஞா் சினேகன் மக்கள் நீதி மய்ய அலுவலகத்தை முறைப்படி திறந்துவைத்தாா்.

புதுவை மாநிலச் செயலா் பிராங்கிளின் பிரான்சுவா நன்றி கூறினாா். புதிய அலுவலகத் திறப்பு விழாவையொட்டி, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com