புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 652-ஆக உயா்ந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,184 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 8 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,146-ஆக உயா்ந்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மாஹே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 652-ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் அதிகரித்தது.
இதனிடையே, 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,215-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 159 போ் உள்பட மொத்தம் 279 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.