புதுச்சேரி: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாததற்கு காங்கிரஸும், திமுகவும் தான் காரணம் என்று புதுவை அதிமுக குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள மாநில அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் புதுவை கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறியதாவது:
புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளன. இதை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் நாராயணசாமி உறுதி அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மத்தியிலும், மாநிலத்திலும் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸும், திமுகவும் புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல், மத்திய நிதிக் குழுவிலும் சோ்க்காமல் துரோகம் இழைத்தனா். ஆனால், தற்போது தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில், மாநில அந்தஸ்து குறித்து பேசுவது மாறுபட்ட செயல் என்றாா் அவா்.