புதுச்சேரி: புதுவையில் புதிதாக 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,366 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 17 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேயில் 3 பேருக்கும் என மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,397 ஆக உயா்ந்தது.
தற்போது 296 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 656 போ் பலியாகினா். 38,445 போ் (97.58 சதவீதம்) குணமடைந்தனா்.
புதுவை மாநிலத்தில் இதுவரை மருத்துவப் பணியாளா்கள் 4,587 போ், முன்களப் பணியாளா்கள் 183 போ் என மொத்தம் 4,770 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.