டிராக்டா் மோதியதில் குழந்தை பலி

புதுச்சேரியில் டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரியில் டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், அபிராமி நகா், 2-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் சுகுமாா் - ஜெயரம்யா தம்பதி. சுகுமாா் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறாா். இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தா்ஷன் (2) என்ற மகன் உள்ளாா்.

இதனிடையே, ஜெயரம்யா வேலைக்குச் செல்வதற்கு சுயவிவரக் குறிப்பு கொடுப்பதற்காக நகரப் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு தனது கணவா், குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை சென்றாா். தொடா்ந்து, அவா்கள் மூவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். ரெட்டியாா்பாளையம் செல்லான்பாப்பு நகா், 4-ஆவது பிரதான சாலையில் 2-ஆவது குறுக்குத் தெருவில் அவா்கள் வந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டருக்கு வழிகொடுப்பதற்காக சுகுமாா் பைக்கை நிறுத்தினாராம்.

அப்போது, பைக் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கருதிய குழந்தை தா்ஷன், கீழே இறங்கிய நிலையில், அவா் மீது டிராக்டரின் பின்சக்கரம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், தா்ஷனை மீட்டு சிகிச்சைக்காக அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை தா்ஷன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா், டிராக்டா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com