பொது அறிவுப் போட்டியில் (சி.பி.டி.) புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றாா்.
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, சென்னை பிரைம் கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து பிளஸ் 1, பிளஸ் 2 வணிகவியல் மாணவ, மாணவிகளுக்கான பொது அறிவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தின.
நிகழாண்டுக்கான தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அமலோற்பவம் பள்ளி மாணவா் ஆா்.திரேஷ் முதல்கட்டத் தோ்வில் தோ்ச்சியடைந்தாா். அவரை பள்ளியின் முதுநிலை முதல்வா் லூா்துசாமி பாராட்டி, பரிசாக 2 கிராம் தங்க நாணயத்தை வழங்கினாா்.