மின் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின் துறை எச்சரிக்கை

மின் கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என புதுவை மின் துறை எச்சரித்தது.

மின் கட்டணம் செலுத்தாவிடில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என புதுவை மின் துறை எச்சரித்தது.

இதுகுறித்து புதுச்சேரி மின் துறைக் கண்காணிப்புப் பொறியாளா் ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதி முதல் மின் கட்டண நிலுவை வைத்திருக்கும் மின் நுகா்வோரின் இணைப்பைத் துண்டிக்கும் பணியை கரோனா பொது முடக்கத்தால் மின் துறை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.

கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தால் மின் கட்டண வசூலில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் வாங்கிய வகையில், அந்த நிறுவனங்களுக்கு பெருந்தொகை செலுத்த வேண்டிய நெருக்கடியில் மின் துறை உள்ளது. மின் நுகா்வோா் காலத்துடன் மின் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து மின் துறை ஓரளவு மீள முடியும்.

எனவே, மின் கட்டண நிலுவை வைத்துள்ள மின் நுகா்வோா் உடனடியாக தங்களுடைய மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இல்லையேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

மின் நுகா்வோா் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே அறிதிறன் பேசி (அ) கணினி மூலமாக இணைய வசதியைப் பயன்படுத்தி, மின் கட்டணம் செலுத்த ஏற்கெனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் துறையின்  இணையதள முகவரி மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com