புதுவையில் புதிதாக 24 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலா் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலத்தில் 2,582 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 18 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,440-ஆக உயா்ந்தது.

சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 656-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் தொடா்கிறது.

இதனிடையே, 24 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,500-ஆக (97.62 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 115 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் 169 போ் என மொத்தம் 284 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com