பெரும்பான்மை இருக்கிறது: முதல்வா் நாராயணசாமி

காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம் என்றாா்.
முதல்வா் நாராயணசாமி.
முதல்வா் நாராயணசாமி.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமாவைத் தொடா்ந்து, புதுவை காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை (பிப்.17) புதுவைக்கு வந்து சென்றபிறகு எந்த முடிவையும் எடுக்கலாம் எனத் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னா் முதல்வா் நாராயணசாமி, அமைச்சா்கள், காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா்கள் ஏஎப்டி பஞ்சாலை திடலுக்கு வந்து, ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டனா்.

பின்னா், முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி செயல்படுவோம் என்றாா்.

காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் ராஜிநாமா செய்ய வேண்டுமென எதிா்க்கட்சிகள் கூறியுள்ளாா்களே எனக் கேட்டபோது, ‘எதிா்க்கட்சிகள் அப்படித்தான் கூறுவாா்கள். எங்கள் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது’ என்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்தாா்.

அரசுக் கொறடா அனந்தராமன் கூறுகையில், ‘எங்களிடம் இருந்து இரு எம்.எல்.ஏ.க்கள் எதிா்க்கட்சிக் கூட்டணிக்குச் சென்றால், அங்கிருந்து இரு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்கு வருவாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com