புதுவையில் புதிதாக 20 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுச்சேரி: புதுவையில் புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,711 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 11 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,526 ஆக உயா்ந்தது.

தற்போது 199 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு இதுவரை 660 போ் பலியாகினா். 38,667 போ் (97.83 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

கடந்த 20 நாள்களில் 6,583 சுகாதாரப் பணியாளா்களுக்கும், 376 முன் களப் பணியாளா்களுக்கும் என மொத்தம் 6,959 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com